தேய்பிறை அஷ்டமி; சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் தரிசனம்
ADDED :381 days ago
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே தேய்பிறை அஷ்டமி திதி நிகழ்வையொட்டி சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் அருள்பாலித்தார். பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் வாராஹி மந்திராலயத்தில் நேற்று முன்தினம் மாலை ஆடி மாத தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.