உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி வழிபாடு

கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி வழிபாடு

விழுப்புரம்; விழுப்புரம் அருகே கோகுலாஷ்டமி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோலியனுார், வரதராஜ பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவருக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவம் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். விழுப்புரம் அருகே காணைகுப்பம் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், விழா காலை 9:00 மணிக்கு தொடங்கியது. மதியம் 2:00 மணிக்கு உறியடி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் ஆரவாரத்துடன், கிருஷ்ணரின் உறியடி நிகழ்வை நினைவுகூர்ந்தனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் தொடர்ந்து, உற்சவர் வீதியுலாவும் நடைபெற்றது. பஜனை குழுக்கள் பக்தி பாடல்களை பாடி ஊர்வலமாக வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !