அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :113 days ago
அலங்காநல்லுார்; அலங்காநல்லுார் அருகே மெய்யப்பன்பட்டியில் காளியம்மன் மற்றும் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்.,4ல் முதல் காலயாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இன்று காலை 2ம் காலயாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது.அம்மன், சுவாமிக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ,ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.