உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலுக்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் பேட்டரி பஸ்

பழநி கோயிலுக்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் பேட்டரி பஸ்

பழநி; பழநி கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக ஒரு பேட்டரி பஸ் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்திரவின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள், கிரிவீதியில் வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் ஸ்டேஷன் சுற்றுலா பேருந்து நிலையம், ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்க பக்தர்களுக்கு இலவசமாக கோயில் நிர்வாகம் சார்பில் பேட்டரி கார், பேட்டரி பஸ் 2024,மார்ச்.,முதல் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 11 பேர் அமரக்கூடிய 18 பேட்டரி கார், 14 பேர் அமரக்கூடிய பேட்டரி மினி பஸ் 1, 23 பேர் அமரக்கூடிய 17 பேட்டரி பஸ்,என 36 மின் வாகனங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் ( நாகா லிமிடெட் நிறுவனம், திண்டுக்கல்) தனியார் நிறுவனத்தின் சார்பில் (குழும தலைவர் கமலக்கண்ணன்) 23 பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் பஸ்ஸை கோயில் இணைக்கமிஷனர் மாரிமுத்துவிடம் ஒப்படைத்தார். தற்போது கிரி வீதியில் கோயில் சார்பில் 37 மின் வாகனங்கள் பக்தர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !