திருப்புத்தூர் அருகே கோயிலில் சாமி சிலைகள் சேதம் : போலீசார் விசாரணை
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் சேதமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்புத்தூர்:திருப்புத்தூர் ஒன்றியம் காரையூரில் மிகவும் பழமையான திருவெற்றிநாதர் -புவனேஸ்வரி அம்மன்கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டு காலத்திற்கும் முந்தையது. அழகான வேலைப்பாடுகளுடைய சிற்பங்கள் கொண்ட கோயில். இக்கோயிலில் காலையில் ஒரு கால பூஜைமட்டுமே நடைபெறும். கோயில் பூட்டப்படும் வழக்கம் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று காலை 9:00 மணி அளவில் சிவாச்சாரியர் கோயிலுக்குள் சென்ற போது நவக்கிரகங்களில் சூரியன் மற்றும் துர்க்கை கற்சிலைகள் லேசான சேதமடைந்துள்ளதும், சிலைகளை பெயர்க்க முயற்சித்ததும் தெரிந்தது. இதனையடுத்து கண்டவராயன்பட்டி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.