திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை சஷ்டி பூஜை
ADDED :4 hours ago
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத சஷ்டி பூஜை விழா நடந்தது. இதையொட்டி முருக பெருமானுக்கு பால்,பழம்,பன்னீர், விபூதி,சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. மேலும் அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.