பாலக்காடு ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா; தேரோட்டம் கோலாகலம்
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், தத்தமங்கலத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா உற்சவ அறக் கட்டளை செயல்படு கிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில், ஆண்டு தோறும், மார்கழி மாதம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில் திருவிழா நடத்துவது வழக்கம். நடப்பாண்டு, 82வது திருவிழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இன்று காலை, 6:00 மணிக்கு திருமஞ்சனம், 6:30 சாஸ்தா கோவிலில் ருத்ராபிஷேகம், 7:30க்கு ஐயப்பன் பாடல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், வேத பாராயணம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து, 10:30 மணிக்கு மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது. நாதஸ்வரம் முழங்க உற்சவரின் ரதாரோகண ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 3:30 மணிக்கு கொடுந்திரபுள்ளி மனோஜ் தலைமையில் பஞ்சவாத்தியம் முழங்க திருத் தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து கிருஷ்ணர் மற்றும் சாஸ்தா கோவில்களில் மகா தீபாராதனை நடந்தது. அதன் பின், கொல்லங்கோடு ரமேஷ் மற்றும் கார்த்திக் குழுவின் நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது. நாளை அதிகாலை தெப்பக்குளத் தேரோட்டம், மஞ்சள்நீர் விளையாட்டு, உற்சவ மூர்த்திக்கு ஆறாட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.