உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனுடன் சில நேரம்; சேலத்தில் 90 வது சிவ ஜெயந்தி விழா

சிவனுடன் சில நேரம்; சேலத்தில் 90 வது சிவ ஜெயந்தி விழா

சேலம்; பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தில் 90 வது சிவ ஜெயந்தி விழா சேலத்தில் நடைபெறுகிறது.


1936ஆம் ஆண்டு தொடங்கியது இந்த ஆன்மீக பயணம் தொடர்ந்து, 90வது சிவ ஜெயந்தி விழாவை கொண்டாடுகிறது, சேலத்தில்  வரும்14.02.2026 முதல் 16.02.2026 வரை சிறப்பாக நடைபெற உள்ளது. தியானம்  தமிழ்நாடு முழுவதும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் அன்பு நிலைக்க, அனைத்து ஆன்மீக தியானிகளும் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து தியானம் செய்து வருகின்றனர், மொத்தம் 1008 மணி நேர தியானம் மேற்கொண்டுள்ளனர். இந்த மகத்தான ஆன்மீக முயற்சி, சமுதாயத்தில் நல்லெண்ணமும் நேர்மறை சக்தியும் பரவ வேண்டிய நோக்கத்துடன் நடைபெற்று வருகிறது. விழாவானது காலை: 7.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் மாலை: 4.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற உள்ளது இதில் அனைவரும் கலந்து கொண்டு சிவனின் அன்பும், அருளையும் பெறலாம்.


மேலும் தொடர்புக்கு;


சிவசக்தி பவன்,

முல்லைநகர் மெயின் ரோடு,

சீரடி  சாய்பாபா கோயில் எதிரில்,

முல்லைநகர், சேலம்-5.


போன் நெ. 0427-3551893, 8870208208.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !