உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தேரோட்டம் விமரிசை

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தேரோட்டம் விமரிசை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான மாசி மாத பிரம்மோத்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வெள்ளி விருஷப வாகனத்திலும், இரவு தங்க மான் வாகனத்திலும், எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். இரண்டாம் நாள் உத்சவமான கடந்த 22ம் தேதி காலை மகர வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் வீதியுலா வந்தார். மூன்றாம் நாளான கடந்த 23ம் தேதி காலை தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும், நான்காம் நாள் உத்சவமான கடந்த 24ம் தேதி காலை தங்க சூரிய பிரபையிலும், இரவு தங்க ஹம்ஸ வாகனத்திலும் காமாட்சியம்மன் வீதியுலா வந்தார்.. ஐந்தாம் நாள் உத்சவமான கடந்த 25ம் தேதி காலை தங்க பல்லக்கிலும், இரவு நாக வாகனத்திலும், ஆறாம் நாள் உத்சவமான காலை முத்து சப்பரத்திலும், இரவு தங்க கிளி வாகனத்திலும் காமாட்சியம்மன் உலா வந்தார். இதில், ஏழாம் நாள் உத்சவமான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !