மயிலம் முருகன் கோவிலில் முத்துப் பல்லக்கு உற்சவம்
ADDED :5 hours ago
மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் பங்குனி உத்திர பெரு விழாவில் முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது.
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவில் பங்குனி உத்திர பெரு விழாவை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு விமானத்தில் உற்சவர் கிரிவலம் நடந்தது. பிற்பகல் 12:00 மணிக்கு மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் உற்சவர் கிரிவலம் நடந்தது. இன்று பங்குனி உத்திர நிறைவு விழாவை முன்னிட்டு காலை 11:00 மணிக்கு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.