வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ராமானுஜர் திருநட்சத்திர உற்சவம்
ADDED :24 minutes ago
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள ராமானுஜர் சன்னதியில் 1,009வது திருநட்சத்திர உற்சவம் கடந்த 13ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 23ம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் ராமானுஜருக்கு திருமஞ்சனம், உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்து வருகிறது. மூன்றாம் நாள் விழாவான நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு மேல் ராமானுஜர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திரளான புத்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் உபயதாரர்கள், பட்டாச்சார்யார்கள் செய்து வருகின்றனர்.