உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறுதியாக இருக்க என்ன வழி: பாரதியார்

உறுதியாக இருக்க என்ன வழி: பாரதியார்

* இடையூறு வந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக இரு.  
* வீட்டு வழிபாட்டால் குடும்பமும், கோயில் வழிபாட்டால் ஊரும் செழிக்கும்.
* வாக்கு கொடுப்பது எளிது. ஆனால் நிறைவேற்றுவது கடினம்.                         
* தீமை எனத் தெரிந்த பின்னும், நல்வழியில் செல்லாமல் இருப்பது அறிவீனம்.      
* அன்பால் பகை அழியும். இன்பம் உண்டாகும்.
* எல்லா உயிர்களையும் நேசி. மனதில் அமைதி இருக்கும்.       
* பயம், சந்தேகம், சோம்பல் ஒழிந்தால் நல்ல காலம் பிறக்கும்.   
* கடவுளை சரணடைந்தால் வலிமை, அழகு, மகிழ்ச்சி உண்டாகும்.
* தியானத்தின் மூலம் விரும்பியதை அடைய முடியும்.      
* மனதில் எப்போதும் நல்ல எண்ணம் வளர வேண்டும்.   
* காலத்தை வீணாக்கினால் அதற்குரிய பலன் கிடைக்காது.
* பேச்சு, செயலில் முரண்படும் மனிதரிடம் உறவாடாதே.   
* எங்கும், எப்போதும், எதிலும் நேர்மையைப் பின்பற்று.
* உண்மையை பேசு. அது உன்னை பாதுகாக்கும்.
* பிறரை ஏமாற்றாதே; அதைப் போல் நீயும் ஏமாறாதே.     
* தன்னுள் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவன் ஞானி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !