உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடலுார் சத்திய ஞான சபையில் சித்திரை மாதப்பூச ஜோதி தரிசனம்

வடலுார் சத்திய ஞான சபையில் சித்திரை மாதப்பூச ஜோதி தரிசனம்

வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.


வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தில், ஆறு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம். சித்திரை மாத பூசம் நட்சத்திரம் தினமான நேற்று, இரவு 7:45 மணிக்கு, சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் வடலுார், குறிஞ்சிப்பாடி, நெ ய்வேலி சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு, ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை’ எனும் மந்திரம் முழங்க, ஜோதி தரிசனம் கண்டு வழிபாடு செய்தனர். பள்ளிகள் கோடை விடுமுறையை ஒட்டி வழக்கத்தை விட, அதிக அளவில் பக்தர்கள் ஜோதி தரிசனம் காண நேற்று வடலூர் பெருவெளியில் திரண்ட னர். சன்மார்க்கர்கள், வள்ளலார் பின்பற்றாளர்கள் ஆங்காங்கே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !