சீக்கியர்களின் புனிதத் தலமான ஹேம்குண்ட் சாஹிப் தலம் நாளை திறப்பு
ADDED :51 minutes ago
உத்தராகண்ட், ஹேம்குண்ட் சாஹிப் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,632 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான சீக்கிய புனிதத் தலமாகும். உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஹேம்குண்ட் சாஹிப்பின் புனிதக் கதவுகள், நாளை பக்தர்களுக்காகத் திறக்கப்படவுள்ளன. இதன் தொடர்ச்சியாக, பஞ்ச் பியாரே குழுவினரின் தலைமையில், யாத்திரீகர்களின் முதல் குழு இன்று கோவிந்த்காட்டிலிருந்து கங்காரியாவை நோக்கிப் புறப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களையும் உள்ளடக்கிய இந்த யாத்திரைக் குழுவில், 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இடம்பெற்றுள்ளனர்.