உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக வழிபாடு

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக வழிபாடு

 விருத்தாசலம்: வைகாசி விசாகத்தையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 சிவ ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், திரவிய பொடிகளால் சிறப்பு அபிேஷகம், சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி வேடப்பர் கோவில், பெரிய கண்டியங்கப்பம் வெண்ணுமலையப்பர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் அர்ச்சனை, விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !