உடுப்பி கிருஷ்ணர் மடத்துக்கு நிர்மலா சீதாராமன் வருகை
உடுப்பி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உடுப்பியின் கிருஷ்ணர் மடத்துக்கு வந்தார்; கிருஷ்ணரை தரிசனம் செய்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று காலை உடுப்பிக்கு வந்த அவர், வரலாற்று பிரசித்தி பெற்ற, கிருஷ்ணர் மடத்துக்கு சென்று, கிருஷ்ணரை தரிசனம் செய்தார்.
அதன் பின், புராதன கோவில்களான அனந்தேஸ்வரா மற்றும் சந்திரமவுலீஸ்வரர் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தார். அங்கிருந்து ஷிரூர் மடத்துக்கு சென்றார். மடாதிபதி வேதவர்த்தன தீர்த்த ஸ்ரீபாதரு, மத்திய அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.
உடுப்பி மாவட்டம், காபு தாலுகாவில் உள்ள, பிரசித்தி பெற்ற மாரிகாம்பா கோவிலுக்கும் அவர் சென்றார்; அம்பாளை தரிசனம் செய்தார். முதன் முறையாக, இக்கோவிலுக்கு வந்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சம்பிரதாயப்படி வரவேற்பு அளித்தது.