மருதமலை பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :2 minutes ago
கோவை; மருதமலை ரோடு ஐ ஓ பி காலனி அருள்மிகு பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று 18ம் தேதி வியாழக்கிழமை நடந்தது. இந்த நிகழ்சியின் முதல் நிகழ்வாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காலயாக பூஜை நடந்தது. தொடர்ந்து புதன்கிழமை அன்று இரண்டாம் காலயாக பூஜையும் அன்று மாலை மூன்றாம் காலயாக பூஜையும் நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான இன்று காலை 5 மணிக்கு நான்காம் காலயாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கும்ப கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவர் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.