உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலடிப்பேட்டை சிவகெங்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

காலடிப்பேட்டை சிவகெங்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

சென்னை; திருவொற்றியூர், காலடிப்பேட்டை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அருள்மிகு சிவகெங்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


திருவொற்றியூர் காலடிப்பேட்டை அருகே உள்ள ராஜா கடை பகுதியில் சிவகெங்காபுரம் பகுதியில்  அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சிவகெங்கை அம்மன் ஆலயத்தில் மகா  கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடைபெற்றது. கடந்த 16ஆம் தேதி காலை விநாயகர் பூஜை உடன் துவங்கிய கும்பாபிஷேக விழா கோ பூஜை கணபதி ஹோமம் மூலவர் உற்சவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு யாகசாலையில்  யாக குண்டம் அமைத்து புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கலசங்களில் வைத்து முதல் கால யாக பூஜை துவக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை நான்காம் கால பூஜை செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை பூரண நதி செய்யப்பட்டது. பின்னர் விமான கோபுர கலசங்களில் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் பட்டாச்சாரியார்கள் மற்றும் ஊர் நிர்வாகிகள் பூஜை செய்யப்பட்ட கலசங்களை தலையில் சுமந்து பிரதிஷ்ட்டியாக மங்கல வாத்தியங்கள் முடக்க கோபுர விமானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கலசத்தில் புனித நீரானது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் பரிவார மூர்த்திகளுக்கு பூஜை செய்யப்பட்ட கலச நீரானது அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபா ஆரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் மதியம் கிராம பொதுநல சங்கம் மற்றும் பழனி பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் ஆலய பெண் நிர்வாகிகள் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் பூஜை செய்யப்பட்ட கலச நீர் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !