உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இன்று மாலை தேரோட்டம்

நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இன்று மாலை தேரோட்டம்

நல்லுார்: நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது.


இக்கோவிலின் ஆனித் தேர்த்திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஸ்ரீமனோன்மணி அம்மன் சமேத சந்திரசேகரர் திருவீதியுலா, சோமாஸ்கந்தர் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் சிறப்பு வாகனக் காட்சிகள் நடந்தன. திருவிழா ஆறாம் நாளான நேற்று காலை சுவாமி திருவீதியுலா, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. மாலையில், யானை வாகனத்தில் உற்சவர் திருவீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 


தேரோட்டம்; இன்று தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதிகாலை சிறப்பு மகா அபிஷேகமும், அதை தொடர்ந்து காலை 10:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளும் ரதாரோஹண நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. தேரோட்டத்தின் போது கயிலாய சிவ வாத்தியம் இசைக்கப்படவுள்ளது. பவளக்கொடி கும்மி, பெருஞ்சலங்கையாட்டம், காராளன் கம்பாத்தட்டம், ஒயிலாட்டம் மற்றும் காவடியாட்டம் ஆகிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. உற்சவமூர்த்திகள் வண்டித்தாரை பார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !