உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை கோவிலுக்கு 1,320 படிகளில் தீர்த்தம் கொண்டு செல்ல புது காளைக்கு பயிற்சி

சென்னிமலை கோவிலுக்கு 1,320 படிகளில் தீர்த்தம் கொண்டு செல்ல புது காளைக்கு பயிற்சி

ஈரோடு; சென்னிமலை முருகன் கோவிலில், 1,320 படிகள் வழியாக திருமஞ்சன தீர்த்தம் சுமந்து செல்லும் புதிய காளைக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


சென்னிமலை:ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. மலை மீதுள்ள மூலவருக்கு அபிஷேகம் செய்ய, மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்த கிணற்றில் இருந்து தினமும், 1,320 படி வழியாக தீர்த்தக்குடங்கள் காளை மீது வைத்து கொண்டு செல்வது நுாற்றாண்டு வழக்கமாக உள்ளது. இதற்காக கோசாலையில் பொதிகாளை பாராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது திருமஞ்சனம் கொண்டு செல்லும் ஒரு காளைக்கு வயதாகி விட்டதால் சிரமப்படுகிறது. இதனால் பக்தர் ஒருவர் முருகப்பெருமானுக்கு, இரண்டாண்டுகளுக்கு முன் தானம் கொடுத்து பராமரிக்கப்படும் கன்றுக்குட்டியை பயன்படுத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக கன்றுக்குட்டிக்கு ஆண்மை நீக்கம் செய்து, மூன்று மாதங்களாக சிறப்பு உணவு கொடுத்து தயார் செய்தனர். தற்போது பழைய காளையுடன் பயிற்சிக்காக புது காளையை தினமும் ஓட்டி செல்கின்றனர். முதல் கட்ட பயிற்சியில் தீர்த்தக்குடம் வைக்காமல் அழைத்து செல்லப்படும். மூன்று மாத பயிற்சிக்கு பிறகு நன்கு பழகிய பின்னால், திருமஞ்சனக்குடம் சுமந்து செல்ல பயன்படுத்தப்படும் என்று, மாடு பராமரிக்கும் பணியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !