உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்திலிருந்து திருப்பதி பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிப்பு

ஸ்ரீரங்கத்திலிருந்து திருப்பதி பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிப்பு

திருப்பதி; ஆனிவார ஆஸ்தானம் எனும் நன்னாளில், தமிழக ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலின் சார்பில் திருப்பதி பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.


திருமலையில் உள்ள ஸ்ரீ பேடி ஆஞ்சநேயசுவாமி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பெரிய ஜீயர் சுவாமி மடத்தில், இன்று காலை பட்டு வஸ்திரங்களைச் சமர்ப்பிக்கும் நிகழ்விற்கான சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அங்கிருந்து, பாரம்பரிய மங்கள வாத்திய இசையுடன், திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் ஆணையர் வினய் ஆகியோர் பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு முக்கிய கோயிலுக்குச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, அப்பட்டு வஸ்திரங்கள் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி திரு. சி. வெங்கய்ய சௌத்ரி, தமிழக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரவிச்சந்திரா, ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாக அதிகாரி சிவராம் குமார் மற்றும் தலைமை அர்ச்சகர் சுந்தர பட்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !