கமுதி அனுமந்த பெருமாள் கோவிலில் மண்டல பூஜை
ADDED :3 hours ago
கமுதி: கமுதி அருகே பாம்புல்நாயக்கன் பட்டி கிராமத்தில் அனுமந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாள் பிறகு மண்டல பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் துவங்கி விக்னேஸ்வர பூஜை, மூல மந்திரங்கள் பூர்ணாஹூதி நடந்தது. பின்பு கோயில் வலம் வந்து கும்பநீர் ஊற்றப்பட்டது. அனுமந்த பெருமாளுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.