ஆடி வெள்ளி தரிசனம்; ஐயப்பன் கோயிலில் ஊஞ்சல் சேவையில் புஷ்கலா தேவி
ADDED :9 hours ago
பரமக்குடி; பரமக்குடி தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆடி 2ம் வெள்ளி கிழமையில் ஊஞ்சல் சேவை நடந்தது. கோயிலில் புஷ்கலா தேவி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இன்று ஆடி வெள்ளி நாளில் அன்னபூரணி அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதேபோல் முத்தாலம்மன் கோயிலில் மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூல் ஊற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து 2வது வெள்ளிக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் பரமக்குடியில் இருந்து நயினார்கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று நாகநாதரை வழிபட்டனர்.