உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழர் பண்பாட்டின் அடையாளத்தை உணர்த்தும் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: முதல்வர் விஜய்

தமிழர் பண்பாட்டின் அடையாளத்தை உணர்த்தும் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: முதல்வர் விஜய்

சென்னை: தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக நாளில்  நலம், வளம், மகிழ்ச்சி பெருகட்டும் என்று முதல்வர் விஜய் கூறி உள்ளார்.


இது குறித்து அவரது அறிக்கை; தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 


தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும். நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறி உள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !