ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :4597 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், கடந்த, 17ம் தேதி, பங்குனி உத்திர உற்சவம் துவங்கியது. தினமும் மாலை, நிலமங்கை தாயாருக்குஉற்சவம், ஊஸ்தலசயனப்பெருமாள் வீதியுலா நடந்தது. இரவு, பெருமாள் மற்றும் தாயார் திருக்கல்யாணம் மற்றும் திருப்பள்ளி உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.ஞ்சல் சேவை நடத்தி, உள்புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம், ஸ்தலசயனப்பெருமாள், தாயாருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது.