வறுமையிலும் தர்மம் செய்ய முடியுமா?
ADDED :4776 days ago
மனிதன், மனம்,மொழி, மெய் மூன்றாலும் தர்மம் செய்யலாம் என்கிறது சாஸ்திரம். பணம் உள்ளவன் மட்டுமே தர்மம் செய்ய முடியும் என்பதில்லை. மனதால் நல்ல எண்ணங்களை சிந்தியுங்கள். வாயில் நல்ல சொற்கள் மட்டும் வரட்டும். கைகளால் நல்ல பணிகளைச் செய்யுங்கள். நல்லவன் வாழ்வான் என்று பூரணமாக நம்புங்கள். இப்படிப்பட்ட நல்லவனுக்கு இறைவனே துணை நிற்பான்.