சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4425 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து செல்லாண்டி நகரில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு கணபதி பூஜை, சித்தி புண்யாதானம் நடந்தது. இதனையடுத்து வாஸ்து பூஜை, கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 4 மணிக்கு பால்குடம் எடுத்தல் வாண வேடிக்கை நடந்தது. 6 மணிக்கு மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பிரதிஷ்டை ஹோமம் நடந்தது. தொடர்ந்து மஹா கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம், 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.