மைசூரு தசரா: 40 லட்சம் பேர் கண்டுகளிப்பு!
ADDED :4530 days ago
மைசூரு: உலகப் புகழ் பெற்ற, மைசூரு தசரா பண்டிகை, இன்று ஏழாவது நாளை எட்டி உள்ளது. தசரா கொண்டாட்டங்களை காண, நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் மைசூரில் குவிந்துள்ளனர். இதுவரை, நாற்பது லட்சத்திற்கும் அதிகமானோர் தசராவை கண்டுகளித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, நகரில் உள்ள அனைத்து ஓட்டல்களும் நிரம்பி வழிகின்றன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஏராளமான அளவில் குவிந்துள்ளனர்.