உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் மன்றத்தில் கார்த்திகை மாத பூசம்

வள்ளலார் மன்றத்தில் கார்த்திகை மாத பூசம்

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் கார்த்திகை மாத பூச விழா நடந்தது. சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் நடந்த கார்த்திகை மாத பூச விழாவிற்கு மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகிகள் வைத்திலிங்கம், நாராயணன், முத்துகருப்பன், பாலு முன்னிலை வகித்தனர். விழா அமைப்பாளர் மூர்த்தி வரவேற்றார். வடிவேல் அடிகள், சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படிக்கப்பட்டு, உலக அமைதிக்காக பிரார்த்தனை நடந்தது. சிறப்பு ஜோதி தரிசனத்திற்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் நடேசன், பழமலை, மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !