காரைக்கால் கடற்கரையில் தை அமாவாசை தீர்த்தவாரி!
ADDED :4353 days ago
காரைக்கால்: காரைக்காலில் தை அமாவாசையொட்டி கைலாசநாதர் மற்றும் நித்திய கல்யாண பெருமாளுக்கு கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது. காரைக்காலில் தை அமவாசையொட்டி நேற்று கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களை வேண்டி வழிப்பட்டனர். முன்னதாக கைலாசநாதர் மற்றும் நித்திய கல்யாண பெருமாள் கடற்கரையில் எழுந்தருளினர். பின் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி முடிந்து நித்தியகல்யாண பெருமாள் மற்றும் கைலாசநாதர் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி காரைக்காலின் முக்கிய வீதிகளில் உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.