பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள், அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அமாவாசையையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், 6:30 மணிக்கு மூலவர் சரநாராயண பெருமாள் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் அலங்காரத்தில் விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 8:00 மணிக்கு நித்தியபடி பூஜை, 8:30 மணிக்கு உற்சவர் பெருமாள் தாயாருடன் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 1:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடந்தது.