உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி வரதராஜபெருமாள் கோயிலில் தேரோட்டம்!

பழநி வரதராஜபெருமாள் கோயிலில் தேரோட்டம்!

பாலசமுத்திரம் : பழநிகோயில் நிர்வாகத்திற்குட்பட்ட, பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் நடந்தது. பெருமாள்கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா செப்.,3 முதல் செப்., 13 வரை நடக்கிறது. நாள்தோறும் வரதராஜ பெருமாள் காலை 7 மணிக்கு சப்பரத்திலும், இரவு 7 மணிக்கு, அனுமார், கருடர், குதிரை, சேஷம் போ ன்ற வாகனங்களில் திருவுலா வருகிறார்.

செப்.,9 ல் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 7.40மணிக்கு பெருமாள் திருத்தேரேற்றம் செய்யப்பட்டு, காலை 8.30 மணிக்கு முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வரதராஜபெருமாள், பூதேவி, ஸ்ரீ தேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்றிரவு 7 மணிக்கு வரதராஜப்பெருமாள் சேஷவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 10 மணிக்கு கொடியிறக்கத்துடன், ஆவணி பிரம்மோற்ச விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை பழநி கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !