உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரன்முளாவில் புறப்பட்டது தங்க அங்கி பவனி: நாளை பம்பை வருகிறது!

ஆரன்முளாவில் புறப்பட்டது தங்க அங்கி பவனி: நாளை பம்பை வருகிறது!

சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜைக்கு, மூன்று நாட்களே உள்ள நிலையில், நேற்று முன்தினம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலிலிருந்து, தங்க அங்கி பவனி புறப்பட்டது. சபரிமலையில், கார்த்திகை, 1ம் தேதி துவங்கி, 41 நாட்கள் நடைபெறும் பூஜையின் இறுதிநாளில் நடப்பது, மண்டல பூஜை. இந்நாளில், அய்யப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க, திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி, பவனியாக எடுத்து வரப்படும்.

பத்தனந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து, மண்டல பூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக, சபரிமலை மாதிரி ரதத்தில் எடுத்து வரப்படும். இறுதியில் தங்க அங்கி பவனி, பம்பை வந்தடையும்.நேற்று முன் தினம் அதிகாலை, 5:00 மணி முதல், கோவில் முன்புறம் பக்தர்கள் தரிசனத்திற்காக, அங்கி வைக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்கு பின், காலை, 6.:30-க்கு அங்கி ரதத்தில் வைக்கப்பட்டு, 7:00 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, ஓமல்லுார் பகவதி கோவிலில் தங்கியது. இன்று இரவு, கோந்நி முருங்கமங்கலம் கோவிலிலும், இன்று இரவு, பெருநாடு சாஸ்தா கோவிலிலும் தங்குகிறது.டிச., 26-ம் தேதி காலை புறப்பட்டு, மதியம் பம்பை கணபதி கோவில் அருகில் தரிசனத்துக்காக வைக்கப்படும். பின், மாலை 3:00 மணிக்கு, தலைச்சுமையாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும். அன்று மாலை 6:30 மணிக்கு, தங்க அங்கி சார்த்தி, தீபாராதனை நடைபெறும்.வரும், 27-ம் தேதி மண்டல பூஜை நேரத்திலும், அய்யப்பனுக்கு அங்கி அணிவிக்கப்படும். இந்நிலையில், கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் தலைமையில், சன்னிதானத்தில் நேற்று, அனைத்துதுறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !