கல்வியில் சிறந்து விளங்க!
ADDED :4012 days ago
உத்கீத ப்ரணவோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வவேத மயோசிந்த்ய
ஸர்வம் போதய போதய
கலைமகளுக்கு குரு ஹயக்ரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரம் சிங்கப்பெருமாள் கோயில் அருகிலுள்ள செட்டிபுண்யம்; சென்னை நங்கநல்லூர் ஆகிய இடங்களில் இவருக்கு கோயில்கள் உண்டு. கல்வியில் சிறப்படைய தினமும் காலை, மாலை இம்மந்திரத்தைக் கூறி வந்தால் கல்வியில் உயர்வடையலாம். வியாழக்கிழமை தினங்களில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சமர்ப்பிப்பது விளக்குக்கு நெய் சேர்ப்பது. 12 முறை வலம் வந்து வழிபடுவது போன்றவை நற்பலனை அதிகரிக்கும்.