உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தி மாரியம்மன் கோவிலில் 2ம் தேதி கும்பாபிஷேகம்!

சந்தி மாரியம்மன் கோவிலில் 2ம் தேதி கும்பாபிஷேகம்!

கடலூர்: கடலூர் துறைமுகம் ரயிலடியில் உள்ள, சந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 2ம் தேதி நடக்கிறது. கடலூர் துறைமுகம் ரயிலடியில்  உள்ள சந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (25ம் தேதி) காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி நவக்கிரக பூஜை,  லட்சுமி ஹோமம் நடக்கிறது. வரும் 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு அங்குரார்ப்பணம்,  கும்பலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை நடக்கிறது. மார்ச் 1ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 11:30  மணிக்கு தீபாராதனை, மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி நடக்கிறது. 2ம் தேதி காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாக  பூஜை, 9:00 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனை, யாத்ராதானம், 9:30 மணிக்கு கலசம்  புறப்பாடு, 9:45 மணிக்கு கும்பாபிஷேகம், மாலை 5:00  மணிக்கு அபிஷேகம், வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !