மாசி மகத்திற்கு மயிலம் முருகன் புதுச்சேரி புறப்பாடு!
ADDED :4073 days ago
மயிலம்: புதுச்சேரியில் நடக்கும் மாசி மக உற்சவத்திற்காக மயிலம் முருகன் புறப்பட்டார். மயிலம் வள்ளி, தெய்வானை சுப்பரமணியர் சுவாமி மாசி மக உற்சவத்தை முன்னிட்டு புதுச்சேரிக்கு புறப்பட்டார். புதுச்சேரி கடற்கரையில் மகா தீர்த்தவாரி உற்சவத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20 பட்ட சுவாமி செய்து வருகிறார்.