உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரிபுராந்தக சுவாமி கோவிலில் நாளை கொடியேற்றம்!

திரிபுராந்தக சுவாமி கோவிலில் நாளை கொடியேற்றம்!

கூவம்: கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில் நாளை, சித்திரை பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் உள்ளது, திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி கோவில். ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பெருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை காலை, 7:30 மணி முதல், 9:00 மணிக்குள், கொடியேற்றமும், அதன்பின் சுவாமி வீதியுலாவும் நடைபெறும். முக்கிய நிகழ்வான தேரோட்டம், ஏப்., 29ம் தேதி காலை, 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் நடைபெற உள்ளது. திருவிழா, தொடர்ந்து, 14 நாட்கள் நடைபெற உள்ளது.

நாள்    காலம்    திருவிழா


ஏப்., 24:    காலை பவழக்கால் சப்பரம் மாலை -    பூத வாகனம்

ஏப்., 25:     காலை பவழக்கால் சப்பரம் மாலை - அதிகார நந்தி

ஏப்., 26:     காலை பவழக்கால் சப்பரம் மாலை -    நாக வாகனம்

ஏப்., 27:     காலை பஞ்சமூர்த்தி சேவை மாலை -ரிஷப வாகனம்

ஏப்., 28:     காலை பவழக்கால் சப்பரம்  மாலை -யானை வாகனம்

ஏப்., 29:     காலை தேரோட்டம் மாலை -நால்வர் வீதியுலா

ஏப்., 30 :    காலை    குதிரை வாகனம் மாலை-பிச்சாடனர் உற்சவம் இரவு - திருக்கல்யாணம்

மே 1:     காலை பவழக்கால் சப்பரம்  இரவு- நடராஜர் அபிஷேகம்        

மே 2:     காலைவள்ளுவன் காட்சி மாலை- தீர்த்தவாரி இரவு - அவரோகணம்

மே 3:     இரவு - திருவூடல் உற்வசம்

மே 4:     இரவு - சண்டிகேஸ்வரர் உற்சவம்

மே 5:     இரவு -பைரவர் வடமாலை

மே 6:     இரவு - ரிஷப வாகனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !