சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் வசந்த உற்சவ ஊஞ்சல் சேவை!
ADDED :4123 days ago
சேலம்: சேலம் அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் நடந்து வரும் வசந்த உற்சவத்தையொட்டி, நந்தவன சூழலில் செயற்கையாக அமைக்கப்பட்ட குளத்தில் நடுவே கட்டப்பட்ட அலங்கார ஊஞ்சலில் சவுந்திரவள்ளி தாயாருடன் சேர்த்தி சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் சவுந்திரராஜர். வசந்த உற்சவத்தையொட்டி, ஏராளமான பெண்கள் பஜனை பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர்.