மந்திர வில்வார்ச்சனையின் பயன்!
ADDED :4082 days ago
தெரிசனம் கண்டுபரி சிக்கின்மா பாதகத்
தீங்கொழியும் வந்த னைசெயின்
சேருமா புண்ணியம தொருகூவி ளந்தனால்
சிவபூ சைபுரி யும்பயன்
உரைசெய்சா லோகமதி ரண்டுசா மீபமூன்று
உற்றசா ரூபம் ஒருநான்(கு)
உறுகூவி ளம்கொண் டுனைப்பூசை செயும்அடியர்
உறுவர்சா யுச்சி யபதம்
வருடமதில் அறுமதிவ ரைக்கும்வைத்து அர்ச்சிப்பர்
மகிகையுறு கூவி ளத்தை
வனதுளசி மூன்றுமதி கமலமெழு தினம்அலரி
மலர்குவ ளைமரு வாசதேவர்
திரிதின மலர்க்கைதை யைந்திரரச் சண்பகமோர்
தினம்அருக் சிக்க என்றாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.