உபசாரம் செய்தலின் பயன்!
புகையிடப் பாவம் அறும் நற்றீபம் மறலியைப்
போக்கும் வியாள தீபம்
பொங்கரா விடபயம் ஒழிக்கும் விடைமேத
புண்ணியம் புருட தீபம்
மகவளிக் கும்குடம் சாந்திநீ ராஞ்சன
மகாபலன் தார கையதோ
மகிழ்சருவ சித்திதரும் இரததீ பிகைவசியம்
வண்பூதி யுதவன் மூன்று
சகமதனில் இரட்சணைக் காகும்த ருப்பணம்
சகல லோகவி வர்த்தனம்
சத்திரமி ராச்சியம் கவரிபாக் கியந்தரும்
தாலவட் டம்சுக மதாம்
சிகரமிகு கனககிரி யென்னுநாற் கோபுரம்
தெய்வமறை நான்கு மாகும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.
நிலைமைதரு விசிறியே சகலமங் கலமுதவும்
நிகம பாரா யணபலன்
நிமலபர முத்தியா மகிழுருத் திரகானம்
நினையுதவும் அத்து விதமாய்த்
தலைமைபெறு பாத்தியம் பாவமறும் உயர்சீர்
தழைக்குமா சமனம் உதவல்
தருமருக் கியமீதல் கருமசா யலனெனத்
தானு ரைத்தனை யாகமம்
பலசுருதி பலமிருதி பலகலைகள் ஆகமம்
பலதந்தி ரங்கள் ஆய்ந்தே
பரமரக சியபரா காசலிங் கார்ச்சனைகள்
பண்ணிமகிழ் புனித வேதத்
திலகமென வுலகில்நடு வாகியசி தாகாச
சிற்சபையின் நற்பொது வில்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.