சித்தலூர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :3794 days ago
தியாகதுருகம்:சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
நடந்தது.
தியாகதுருகம் அடுத்த சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கருவறையில் உள்ள பிரமாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இரவு உற்சவர் அம்மன் சர்வ அலங்காரத்தில் வசந்தமண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் ஊஞ்சலில் வைத்து அம்மனை தாலாட்டி பக்தி பாடல்களை பாடினர். திரளான பக்தர்கள் உற்சவத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பூசாரிகள் தமிழ்செல்வன், கண்ணன், பாஞ்சாலை, கோவிந்தசாமி ஆகியோர் பூஜைகளை செய்தனர்.
அதேபோல் புக்குளம் பெரியாண்டார் கோவில் வடபூண்டி பச்சையம்மன் கோவில்களிலும்
அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.