உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தலூர் கோவிலில் அமாவாசை வழிபாடு

சித்தலூர் கோவிலில் அமாவாசை வழிபாடு

தியாகதுருகம்:சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தது.தியாகதுருகம் அடுத்த சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து கருவறையில் உள்ள பிரமாண்ட புற்றுக்கு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.இரவு சர்வ அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனை ஊஞ்சலில் வைத்து பக்தி பாடல்களை பாடி தாலாட்டும் உற்சவம் நடந்தது. மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அதேபோல் வடபூண்டி பச்சையம்மன் கோவில், புக்குளம் பெரியாண்டார் கோவிலிலும் அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !