புனித சந்தனமாதா ஆலய மின் அலங்கார தேர் பவனி!
ADDED :3725 days ago
காரைக்கால்: காரைக்கால் பிள்ளைத்தெரு வாசல் புனித சந்தனமாதா ஆலய ஆண்டு திருவிழாவில் மின் அலங்கார தேர் பவனி நடந்தது. காரைக்கால் பிள்ளைத்தெரு வாசலில் புனித சந்தனமாதா ஆலய ஆண்டு திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 25ம் தேதி சிறிய தேர்பவனியும் அதைத்தொடர்ந்து நற்செய்தி கூட்டம் நடந்தது.நேற்று முன்தினம் 26ம் தேதி திருவிழா திருப்பலியும் மின்விளக்கு அலங்கார தேர்பவனியும் நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நேற்று திருவிழா திருப்பலியும் கொடிஇறக்கம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தைகள் மற்றும் கிராம நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.