தீவனூர் கோவில் தேரோட்டம்
ADDED :5204 days ago
திண்டிவனம் : தீவனூர் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இக்கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 8ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்து வருகிறது. விழாவின் ஏழாம் நாளான நேற்று காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இன்று மாலை திருக்கல்யாணமும், நாளை புஷ்ப ரதமும், 17ம் தேதி சந்திரப் பிரபை வாகன வீதியுலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகி முனுசாமி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.