ஆனைமலை தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு!
ADDED :3744 days ago
ஆனைமலை: அங்கலக்குறிச்சி காலசம்ஹரா பைரவ மூர்த்தி கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆனைமலை அருகே, அங்கலக்குறிச்சி கோபால்சாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கால சம்ஹார மூர்த்தி பைரவர் கோவில்.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இங்கு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.பைரவருக்கு பால் சந்தனம், இளநீர், திருமஞ்சனம், தேன் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் அபிேஷகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.
காலை, 11:30க்கு நடந்த சிறப்பு பூஜையில், பைரவருக்கு மிகவும் பிடித்தமான வெண்
பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவையும், பக்தர்கள் வெண் பூசணியில் விளக்கேற்றினர். மாலை, 4:30 மணிக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டனர்.