புகழிமலையில் கிருத்திகை விழா!
ADDED :3730 days ago
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம், புகழிமலை பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில், ஆவணி மாதம் கிருத்திகை விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். புகழிமலை பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது.
உச்சி கணபதி மற்றும் பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின், பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.