திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதோஷ விழா
ADDED :3991 days ago
திருமலைக்கேணி : திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வளாகத்தில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.