வேகமாக வளரக் கூடியது
ADDED :5363 days ago
தர்மபுத்திரர் தன் சகோதரர்களை யட்சனிடமிருந்து காப்பாற்ற புறப்பட்டபோது., யட்சன் கேட்டான். புல்லைவிட வேகமாக வளரக்கூடியது எது? என்று. வேகமாக வளரக் கூடியது கவலை என்றார். அடுத்த கேள்வியாக, உன்னை ஆச்சரியப்பட வைத்தது எது? என்று வினவியபோது, தினமும் மனிதர்கள் இறந்த போதும், தான் என்றும் இருப்பவனாக மனிதன் கொள்ளும் இறுமாப்பினைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன் என்றார் தர்மபுத்திரர். எவ்வளவு சத்தியமான வார்த்தை.