உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி மகா சிவராத்திரி பெருவிழா

ஊட்டி மகா சிவராத்திரி பெருவிழா

ஊட்டி: ஊட்டி காந்தள் காசி விஸ்வநாதர் கோவிலில், மகா சிவராத்திரி பெருவிழா இன்று நடக்கிறது.

கடந்த, 5ல் திருவிளக்கு பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று மாலை, 3:00 மணிக்கு மகா பிரதோஷம் நடந்தது. முக்கிய திருவிழா நாளான இன்று காலை, 7:00 மணிக்கு கால சந்தி பூஜை, 11:00 மணிக்கு, உச்சி கால பூஜையை தொடர்ந்து, பகல், 11:30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பிற்பகல் 2:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகாயாக பூஜையும், மாலை, 3:30 மணிக்கு, மகா அபிஷேகம், மாலை, 5:00 மணிக்கு மகா தீபாராதனையை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு சுவாமி ஆலய வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பரதநாட்டியம் நிகழ்ச்சியும், இரவு, 8:00 மணிக்கு சங்கீத சாம்ராட் செம்மை சுவா மிகளின் சிஷ்யர் கலாரத்தினம் ஐயப்ப கானஜோதி ஜெயனின் பக்திபாடல் மற் றும் கர்னாடிக் கச்சேரியும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

ஊட்டி பெர்ன்ஹில் பவானீஸ்வரர் கோவிலில், இன்று மாலை 6:00, இரவு 9:00 மணி, நள்ளிரவு 12:00 மணி, நாளை அதிகாலை 3:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோத்தகிரி முத்தையா அரங்கத்தில் மாலை, 6:00 மணிக்கு, ஈஷா யோகா சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில், ஞானம், தியானம் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !