மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
ADDED :3513 days ago
மகுடஞ்சாவடி: சேலம் மாவட்டம், இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த, 15ம் தேதி, பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று, மாரியம்மன், காளியம்மன் சுவாமிகளின் திருவீதியுலா நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள், தேங்காய் உடைத்து, பூஜை செய்து சுவாமியை வழிபட்டனர். நாளை தீமிதி விழாவும், 31ம் தேதி, தேரோட்டமும் நடக்கிறது. ஏப்., 2ம் தேதி, மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவடைகிறது.